குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



எல்லைக்கட்டுப்பாடு

இறங்குதுறைகள் கிளை

அங்கீகரிக்கப்பட்ட இறங்குதுறைகள் ஊடாக நாட்டிற்குள்வருகைத்தரும் மற்றும் வெளியேறும் வெளிநாட்டினருக்கும் இலங்கையர்களுக்கும் வினைத்திறன்மிக்க மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்குவதே இந்தக் கிளையின் பிரதான செயற்பாடாகும். அத்தகைய கடமைகளை நிறைவேற்றும்போது, கிளை நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்து பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்கின்றது.

6 ஆவதுமாடியில் 'A' மற்றும் 'B' பகுதிகளில்அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் இறங்குதுறைகள்கிளை, தேவையான சந்தர்ப்பங்களில்ஏற்புடைய புலனாய்வுகளை மேற்கொள்வதோடு,  ஏற்புடைய வசதிகள் மற்றும் ஏனைய ஒத்துழைப்பு சேவைகளையும் வழங்குகின்றது.

உள்வரும் மற்றும் வெளியேறும் இறங்குதுறைகள்

விமான நிலையங்கள்

  1. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் - கட்டுநாயக்க
  2. மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம்
  3. கொழும்பு சர்வதேச விமான நிலையம் - இரத்மலானை
  4. யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்
  5. கொக்கலை விமான நிலையம்
  6. மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம்

துறைமுகங்கள்

  1. கொழும்புத் துறைமுகம்
  2. காலித் துறைமுகம்
  3. ஹம்பாந்தோட்டை  சர்வதேச  விமான நிலையம்
  4. திருகோணமலை துறைமுகம்
  5. காங்கேசந்துறை துறைமுகம்
  6. தலைமன்னார் ஜெட்டி
  7. நுரைச்சோலை துறைமுகம்
  8. ஒலுவில் துறைமுகம்
  9. கொழும்பு CHEC துறைமுக நகரம்( குடிவரவு/குடியகல்வு)

பணிகள்

  1. இலங்கைக்கு வருகைத்தரும் மற்றும் இலங்கையிலிருந்து வெளியேறும் பயணிகளுக்கான தடைநீக்க நடைமுறைகளை மேற்கொள்ளல்.
  2. இலத்திரனியல்பயண அங்கீகாரத்தைப் பெறாமல் இலங்கைக்கு வரும் வெளிநாட்டினருக்குஇறங்குதுறைகளில் இலத்திரனியல்பயண அங்கீகாரத்தை வழங்குதல்.
  3. இலங்கையில் உள்ள எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட துறைமுகத்திலும் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலின் கப்பற்பணி குழுவினருக்கு நாட்டிற்குள் தற்காலிகமாக நுழைவதற்கான அனுமதிகளை வழங்குதல்.
  4. இலங்கைக்கு வரும் கப்பற் பணியாளர்களுக்குஅனுமதிப் பத்திரங்கள் (ஸ்டிக்கர்கள்) வழங்குதல்.
  5. இலங்கையில் வெளிநாட்டு தூதரகங்கள் இல்லாத நாடுகளுக்குள் நுழைவதற்கான விசாக்களைப் பெறுவதற்குத் தேவையான கடவுச்சீட்டுக்களை கூரியர் சேவை / ஏற்புடைய தூதரகங்கள் அமைந்துள்ளஇடங்களுக்கு மூன்றாம் தரப்பு மூலம் அனுப்புதல்.
  6. பல்வேறு நிறுவனங்களின் தேவைகள்அடிப்படையில் பயணிகளின்பயண அறிக்கைகளின் விபரங்களைக் கொண்ட கடிதங்களை வழங்குதல்.
  7. ஆட்களின்வருகை மற்றும் வெளியேற்றம் தொடர்பாக நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளை செயற்படுத்தல் மற்றும் ஆட்களின்வருகை மற்றும் வெளியேற்றம்தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட கடிதங்கள் தொடர்பாக கடமைகளைச் செய்தல்.
  8. ஏற்கனவே இலங்கை குடியுரிமை பெற்றிருந்த ஆட்களின் மனித எச்சங்கள் மற்றும் மனித சாம்பலை தருவித்துக்கொள்வதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைகளுக்கு அனுமதி அளித்தல்.
  9. இலங்கைக்கு வருகைத்தரும் மற்றும் வெளியேறும் இறங்குதுறைகளில் பயணிகள் பூர்த்தி செய்ய வேண்டிய குடிவரவு /குடியகல்வுப் படிவங்களை வழங்குதல்.
  10. இறங்கு ​துறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடிவரவு அதிகாரிகளின் சேவைகளை வழிநடாத்தல், மேற்பார்வை செய்தல், மீளாய்வு செய்தல் மற்றும் இற்றைப்படுத்தல்.
  11. தொழில் அபிவிருத்திக்கு வசதிகளை வழங்கும் பொருட்டு இலங்கையில் உள்ள உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் ஒத்துழைப்புடன் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கான உள்நாட்டுமற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல்.
  12. ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு, வீசா மீறல்கள் மற்றும் நாட்டிற்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில்மீளாய்வு செய்தல்.

இறங்குதுறைகள் கிளை மூலம் வழங்கப்படும் சேவைகள் - தலைமை அலுவலகம்

  1. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு கடவுச்சீட்டுகளை அனுப்புவதற்கும் மீண்டும்இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதற்கும் அனுமதிவழங்குதல்.
    1. கூரியர் சேவை மூலம்
    2. மூன்றாம் தரப்பினர் மூலம்

      தேவையான ஆவணங்கள்
      1. கடவுச்சீட்டின் பிரதி மற்றும் அதன் தரவுப் பக்கத்தின்பிரதி.
      2. கடவுச்சீட்டுஉரிமையாளரிடமிருந்து ஒரு கோரிக்கை கடிதம்.
      3. கூரியர் சேவையிலிருந்து பெறப்பட்ட வாக்குறுதிக் கடிதம் மற்றும் அதன் பிரதி.
      4. கடவுசீட்டை அனுப்புவதன் நோக்கத்தை நியாயப்படுத்தக்கூடிய துணை ஆவணங்கள்.
      5. (16 வயதுக்கு உட்பட்ட குழந்தையின்) கடவுச்சீட்டு அனுப்பப்படுமாயின் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் பிரதியோடுபெற்றோரிடமிருந்துஅனுமதிக் கடிதத்தை சமர்ப்பித்தல் வேண்டும்.
      6. மூன்றாம் தரப்பு மூலம் கடவுச்சீட்டை அனுப்பும்போது பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல்வேண்டும்.
        • கடவுச்சீட்டின் உரிமையாளர்தான் சார்பாக கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதற்கு மூன்றாம் தரப்பினரை பரிந்துரைத்து வழங்கும்  கோரிக்கை கடிதம்.
        • கடவுச்சீட்டு உரிமையாளரினால் அவர் சார்பாக கடவுச்சீட்டை எடுத்துச் செல்வதற்குகுடிவரவு மற்றும் குடியகல்வுக்கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் மூன்றாம் தரப்பினரால் விடுக்கப்படும் கோரிக்கை​கடிதம்.
      7. வெளிநாட்டு தூதரக கிளையிலிருந்து வழங்கப்படும்கடவுச்சீட்டை வெளிநாடுகளுக்கு அனுப்பும்போது, பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும்.
        • புதிய கடவுச்சீட்டு மற்றும் அதன் தரவுப் பக்கத்தின் பிரதி
        • கடவுச்சீட்டுஉரிமையாளரின் எழுத்துமூல வேண்டுகோளின் பேரில் வெளிநாட்டு தூதரக கிளையால் வழங்கப்படும் புறக்குறிப்பு.
        • அதிகாரமளிக்கப்பட்ட ஆளின்தேசிய அடையாள அட்டையின் பிரதி.
        • கூரியர் சேவையிலிருந்து பெறப்பட்ட வாக்குறுதிக் கடிதமும் அதன் பிரதியும்.
        • மூன்றாம் தரப்பினர் மூலம்அனுப்புவதாயின்  அந்தக்கடவுச்சீட்டை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கான அவரது விருப்பத்தை/ வாக்குறுதியை வெளிப்படுத்தும் கடிதம்.​

          குறிப்பு: மேற்படி நோக்கங்களுக்காக, ஒரு கடவுச்சீட்டுக்கு  ரூ. 2,000/- கட்டணம் அறவிடப்படும். வேலை நாட்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை மட்டுமே பணம் செலுத்த முடியும்.
           
  2. வெளிநாட்டு கப்பற் பணிக் குழுக்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் (ஸ்டிக்கர்கள்) வழங்குதல்

    கப்பற் பணிக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு பிணையமொன்றில் கையெழுத்திடுதல் வேண்டும். இலங்கைக்குள் நுழையும் கப்பல்களில் சேவை செய்து கொண்டிருக்கும்  வெளிநாட்டினர் மற்றும் கப்பல்களின் சேவையை நிறைவுசெய்து   இலங்கையை விட்டு வெளியேறும் வெளிநாட்டினருக்காக இந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.  நாட்டிற்குள் நுழைய விரும்பும் நபரின் உள்நாட்டுப் பிரதிநிதியால் ஏற்புடைய அனுமதிப் பத்திரக் கட்டணத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு செலுத்துதல் வேண்டும். ஏற்புடைய கட்டணத்தைச் செலுத்திய பின்னர்பிரதிநிதிக்கு பார்கோடுள்ளஸ்டிக்கர் வழங்கப்படும்.

    குறிப்பு:  மேலுள்ள நோக்கங்களுக்காக அனுமதிப் பத்திரம்  ஸ்டிக்கருக்குUSD 25 கட்டணம் அறவிடப்படுகின்றது.  வேலை நாட்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை மட்டுமே பணம் செலுத்த முடியும்.
     
  3. அரசாங்க நிறுவனங்களின் அமுலாக்கல் அதிகாரிகளின்கோரிக்கைகளுக்கு அமைய ஆட்களின்பயண விபரங்களை வழங்குதல்.
     
  4. இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் முன்னாள் இலங்கைக் குடியுரிமைப் பெற்றிருந்தவர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வருகைத்தருவதற்கான புறக்குறிப்பு இடுதல்.
     
  5. வலுவூட்டப்பட்ட வெளிநாட்டுப் பயண ஆவணங்களைஇலங்கையில் உள்ள ஏற்புடைய வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்புதல்.
     
  6. பல்வேறு தரப்பினர்களுக்கு  கடிதங்களைத் தயாரித்தல்.
     
  7. இலங்கையில்அல்லதுவெளிநாட்டில்காணாமல் போனவர்களின்பயணத் தகவல்களைஅவர்களின்மிக நெருங்கியகுடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குதல்.
     
  8. முன்னர் இலங்கை குடியுரிமை பெற்ற ஆட்களின் மனித எச்சங்கள் மற்றும் மனித சாம்பலைதருவித்துக்கொள்வதற்காக  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்  கோரிக்கைகளுக்கு அனுமதி வழங்குதல்.


தொடர்பாடலுக்கான தகவல்கள்
முகவரி   -இறங்குதுறைகள் பிரிவு, 06 ஆவது மாடி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், " சுஹுருபாய, பத்தரமுல்லை, இலங்கை.
தொலைபேசி - +94112101581
மின்னஞ்சல் - dcports@immigration.gov.lk
                           aoports@immigration.gov.lk
                           hoports@immigration.gov.lk

அதிகாரிகளை தொடர்புகொள்வதற்கான தகவல்கள்

பிரதிக் கட்டுப்பாட்டாளர் (எல்லைக் கட்டுப்பாடு)

 திரு. எம். டபிள்யூ. ஜே. டி.

ஜயமான்ன
+94112101560
உதவிக் கட்டுப்பாட்டாளர் (எல்லைக் கட்டுப்பாடு) திரு. எம். டி. செய்னுல் ரிழா
+94112798365
உதவிக் கட்டுப்பாட்டாளர் (பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்)

+94112263974

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் 
                                                                  உள்வரும் முனையம்
0112253092
                                                                 வெளியேறும் முனையம் 0112252373
அதிகாரம்பெற்ற உத்தியோகத்தர் (இறங்குதுறைகள் பிரிவு) பிரதான அலுவலகம் 0112101581
கொழும்பு சர்வதேச விமான நிலையம் – இரத்மலானை 0112183352
மத்தளை ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் 0472031908
கொழும்புத் துறைமுகம் 0112483266
காலி துறைமுகம் 0912227111
ஹம்பாந்தோட்டை  சர்வதேச  விமான நிலையம் 0472258108

 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
43590562