குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்

வெளிநாட்டில் இலங்கையரின் அடையாளம்



வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழான வீசா நிகழ்ச்சித் திட்டம்

இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை வதிவிட வீசாவை எவருக்குப் பெற்றுக் கொள்ள முடியும்?

வதிவிட விருந்தினர் திட்டத்தின் கீழான வீசா நிகழ்ச்சித் திட்டமானது, நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்கின்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும்தொழிற்றுறையாளர்களுக்கும் வசதியளிக்கப்பட்டுள்ள ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.​

நடைமுறைப்படுத்தும்முகவர் நிறுவனம் யாது?

வதிவிட விருந்தினர் வீசா நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவனம் என்பது ஏற்புடைய அரசாங்க முகவர் நிறுவனங்களின் சிரேஷ்ட அலுவலர்களைக் கொண்ட ஓர் அமைப்பாகும். நடைமுறைப்படுத்தும்  இலங்கை முகவர் நிறுவன அலுவலகமானது, இலங்கையில் "சுகுறுபாயா",  பத்தரமுல்லை எனும் முகவரியில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தில் அமைந்துள்ளது.

இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை வீசாவுக்காக விண்ணப்பிப்பது எவ்வாறு?

வதியும் விருந்தினர் திட்டமானது, வெளிநாட்டவர்கள் அனைவருக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அதே போன்று சமூக, கலாசார அபிவிருத்திக்கும் பங்களிப்புச் செய்யக் கூடிய எந்தவொரு முதலீட்டாளருக்கும்/ தொழிற்றுறையாளருக்கும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

வதியும் வீசா விண்ணப்பப் படிவங்களை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?

  • நடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவன அலுவலகத்திலிருந்து (இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்).
  • விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கும் செய்து கொள்ள முடியும்.

வதியும் வீசா விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?

முதலீட்டாளர் வகை

  1. முறையாக/ சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  2. கடவுச்சீட்டின் நிழற் பிரதி.
  3. ஆறு (06) புகைப்படங்கள் (6 cm x 5 cm).
  4. திருமணமானவராக இருப்பின் திருமணச் சான்றிதழின் நிழற் பிரதி.
  5. கல்வி மற்றும் தொழிற் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள் (இருப்பின்).
  6. மருத்துவச் சான்றிதழ்.
  7. உரிய நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்.
  8. முதலீடு செய்யப்படுகின்ற கருத்திட்டம் தொடர்பான விபரங்கள்.
  9. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட RGFCA (Resident Guest Foreign Currency Account) வங்கிக் கணக்கு (உறுதிப்படுத்துதல் வேண்டும்).
    • விண்ணப்பதாரி - US$ 250,000 (ஆகக் குறைந்தது)
    • தங்கி வாழ்வோர் - US$ 35,000 (ஆகக் குறைந்தது)
  10. RGRCA (Resident Guest Rupee Currency Account) வங்கிக் கணக்கு.

தொழிற்றுறை வகை

  1. முறையாக/ சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்.
  2. விண்ணப்பதாரியின் கோரிக்கைக் கடிதம்.
  3. கடவுச்சீட்டின் நிழற் பிரதி.
  4. ஆறு (06) புகைப்படங்கள் (6 cm x 5 cm).
  5. திருமணமானவராக இருப்பின் திருமணச் சான்றிதழின் நிழற் பிரதி.
  6. உள்ளூர் மற்றும் சர்வதேச கல்வி மற்றும் தொழிற் தகைமைகள் பற்றிய சான்றிதழ்கள்.
  7. கருத்திட்ட முன்மொழிவு.
  8. மருத்துவச் சான்றிதழ்.
  9. உரிய நாட்டிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழ்.
  10. பாராட்டுக்கள்
  11. விருதுகள்.
  12. இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்துதல் வேண்டும்).
    • விண்ணப்பதாரி - US$ 2,000 (ஆகக் குறைந்தது)
    • தங்கி வாழ்வோர் - US$ 1,000 (ஆகக் குறைந்தது).

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் எனக்கு வீசா கிடைத்தால், எனது குடும்ப அங்கத்தவர்களையும் நான் வரும் போது அழைத்துவர முடியுமா?

முடியும். நீங்கள் தகைமைபெற்ற முதலீட்டாளராக அல்லது தொழிற்றுறையாளராக இருப்பின் உங்கள் வாழ்க்கைத் துணை, தங்கிவாழும் பிள்ளைகள், உங்களின் பெற்றோர் மற்றும் உங்களது வாழ்க்கைத் துணையின் பெற்றோர் ஆகியோரை அழைத்து வரலாம்.

எடுத்து வரக்கூடிய பணத்திற்கான வரையறை யாது?

முதலீட்டு வகை

இத் திட்டத்தின் கீழ் இந் நாட்டுக்கு வருகை தர எதிர்பார்த்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளரொருவர் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர் அல்லது மாற்றக்கூடிய அத் தொகைக்கு இணையான வெளிநாட்டு பணத்தைக் கொண்டு வந்து இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வணிக வங்கியிலும் விசேட கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும். வேறொரு வெளிநாட்டுத் தரப்பினருடன் அல்லது தரப்பினர்களுடன் இணைந்து ஏதேனும் முதலீட்டுக் கருத்திட்டத்தை ஆரம்பிக்க முதலீட்டாளர் எதிர்பார்ப்பதாயின், அத்தகைய ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் 250,000 அமெரிக்க டொலர்களை அல்லது மாற்றக்கூடிய அத் தொகைக்கு இணையான வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு வந்து முதலீடு செய்தல் வேண்டும். முதலீட்டாளருடன் வருகை தருகின்ற ஒவ்வொரு தங்கிவாழ்பவர் தொடர்பாகவும் 35,000 அமெரிக்க டொலர்கள் வீதம் மேலதிக பணத்தொகையை வைப்புச் செய்தல் வேண்டும். பாவனைக்கு எடுக்காமல் மீதியாக இருக்கும் வைப்புத் தொகைக்காக காலத்திற்குக் காலம் இலங்கை மத்திய வங்கி தீர்மானிக்கின்ற அளவின் அடிப்படையில் வட்டி செலுத்தப்படும். இங்கு இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டமையை அத்தாட்சிப்படுத்துகின்ற எழுத்திலான சான்றுகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.ஆரம்ப வைப்புகளுக்கு மேலதிகமாக, முதலீட்டாளர் தனதும் தன்னில் தங்கிவாழ்வோரினதும் வாழ்க்கைக்குப் போதுமான அளவு பணத்தைக் கொண்டு வருதல் வேண்டும்.

தொழிற்றுறை வகை

இத் திட்டத்தின் கீழ் இலங்கையில் வசிப்பதற்குக் கருதும் தொழிற்றுறையாளரொருவர் தமக்காக குறைந்த பட்சம் 2,000 அமெரிக்க டொலர்களையும், வாழ்க்கைத் துணை உட்பட தம்மில் தங்கி வாழ்வோருக்காக ஒருவருக்கு மாதமொன்றிற்கு 1,000 அமெரிக்க டொலர் வீதமும் வாழ்க்கைச் செலவுக்காக இலங்கையில் விசேட வங்கிக் கணக்கொன்றில் வைப்புச் செய்தல் வேண்டும்.

முதலீட்டு வகை

எவரேனும் வெளிநாட்டு முதலீட்டாளரொருவரினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற நிதியை அங்கீகாரம் வழங்கப்பட்ட கருத்திட்டமொன்றில் முதலீடு செய்தல் வேண்டும். இலங்கையில் வதியும் முதல் இரண்டு வருட காலப்பகுதிக்குள் இந் நாட்டில் முதலீடு செய்வது தொடர்பில் திருப்திகரமான முன்னேற்றத்தை வெளிக்காட்டாவிட்டால், அந்த முதலீட்டாளரது விசேட கணக்கில் உள்ள வரவு மீதிக்காக தொடர்ந்தும் வட்டி செலுத்தப்படுவதை நிறுத்துவதற்குநடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவனத்திற்கு முடியும்.

இத் திட்டத்தின் பணிகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்கள் வருமாறு:

  • இலங்கை முதலீட்டுச் சபையினால் (BOI) அல்லது ஏற்புடைய அதிகாரிகளினால் அங்கீகரிக்கப்படவுள்ள புதிய தொழில் முயற்சிகள்.
  • ஏற்புடைய அதிகாரிகளின் அங்கீகாரத்திற்கு உட்பட்ட  தற்போதுள்ள அல்லது புதிதாக அரம்பிக்கப்படுகின்ற கம்பனிகள்.
  • கொழும்பு பங்குச் சந்தையில் குறிப்பிடப்பட்டுள்ள பங்குகள்.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, முதலீடுகளுக்கான வாய்ப்புகளை இனங் காண்பதற்கும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தேவையான சகல வசதிகளையும் இலங்கை முதலீட்டுச் சபை வழங்கும்.

விசேட கணக்குகள்

கீழே விபரிக்கப்பட்டுள்ளவாறு இலங்கையிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கியிலும் தனித் தனியாக இரண்டு விசேட கணக்குகளை ஆரம்பிப்பதற்கு, இத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

  1. வதியும் விருந்தினர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (Resident Guest Foreign Currency Account - RGFCA)
    • இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கருத்திட்டத்திலும் முதலீடு செய்வதற்காக, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் இக்கணக்கில் வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
    • கணக்கில் உள்ள பாவிக்கப்படாத மீதிக்காக முதலிரண்டு வருடங்களில் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குடன் தொடர்புடைய வட்டி அளவை விஞ்சாத வட்டி வங்கியால் செலுத்தப்படும். இரண்டு வருடங்களின் பின்னரான வட்டி செலுத்தப்படுதலானது நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் அங்கீகாரத்திற்குக் உட்பட்டதாகும்.
    • முதலீடு தவிர்ந்த வேறு கருமங்களுக்காக கணக்கிலிருந்து பணத்தை மீளப்பெறுவதற்கு, அதுநடைமுறைப்படுத்தும் முகவர்நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
    • இக் கணக்கு மீதியின் அடிப்படையில் செலுத்தப்படுகின்ற வட்டியை, வதியும் விருந்தினர் ரூபா நடைமுறைக் கணக்கிற்கு மாற்றலாம்.
  2. வதியும் விருந்தினர் ரூபா நாணயக் கணக்கு (Resident Guest Rupee Currency Account - RGRCA)
    • இலங்கையில் வசிப்பதற்காக அனுப்பப்படுகின்ற பணம், முதலீடுகள் மூலமாக பெறப்படுகின்ற வருமானம், பங்கு விற்பனை மூலம் பெறப்படும் பணம் என்பவற்றை இக் கணக்கில் வரவு வைக்க அனுமதி வழங்கப்படும்.
    • இக் கணக்கிலிருந்து பணத்தை வெளியில் அனுப்புதல் செலாவணிக் கட்டுப்பாட்டாளரது பூர்வ அங்கீகாரத்திற்குக் உட்பட்டதாக அமைதல் வேண்டும்.

மூலதன வருமானத்தை வெளிநாட்டிற்கு அனுப்புதல்

தற்போது அமுலிலுள்ள செலாவணிக் கட்டுப்பாடு மற்றும் வரி ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்ட வகையில் கீழுள்ளவாறு வெளிவாரி கொடுப்பனவுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

  • முதலீட்டாளரின் விசேட கணக்கில் உள்ள பாவனைக்கு எடுக்காத பணம்.
  • முதலீடுகளிலிருந்து பெறப்படுகின்ற வருமானமும்மூலதன இலாபங்களும்
  • முதலீடுகளை விற்பனை மூலம் பெறப்படுகின்ற பணம்.

எனது வதியும் விருந்தினர் திட்டத்தின் வீசா மீது தாக்கம் செலுத்தும் கட்டணங்கள் யாவை?

வதியும் வீசா கட்டணம் மற்றும் வரி என்பவற்றிற்கு மேலதிகமாக 250 டொலர்கள் அல்லது அதற்கு இணையான மாற்றக்கூடிய நாணயத்தை அமுல் செய்யும் முகவராண்மைக்குச் செலுத்த வேண்டும்.
வீசா கட்டணம் தொடர்பான விபரங்களைப் பெற இங்கே சுடக்குக.

வதியும் விருந்தினர்களுக்கான நிபந்தனைகள்

வதியும் விருந்தினர்கள் மூலம் பின்வரும் கருமங்கள் நிறைவேற்றப்படல் வேண்டும்.

  • விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள்/ திருத்தங்கள் ஏற்பட்டால் அத்தகைய மாற்றம்/ திருத்தம் ஏற்பட்டு இரண்டு (2) மாதங்களுக்குள் அது பற்றி நடைமுறைப்படுத்தும் முகவர் நிறுவனத்திற்கு அறிவித்தல் வேண்டும்.
  • இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு தொடர்பான ஏற்பாடுகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • இலங்கையின் வரி விதிப்பு தொடர்பான சட்டங்களைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • இலங்கை அரசாங்கத்தின் பிற சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் அனைத்தையும் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • பொது மக்கள் நலனுக்கு காரணமாக அமையாத அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய அரசியல் அல்லது பிற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
  • தமது நாட்டின் பொலிஸ் பிரிவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் தடைநீக்கச் சான்றிதழை சமர்ப்பித்தல் வேண்டும்.

வதியும் விருந்தினர் தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை/ தொழிற்றுறை சேவையை முடிவுறுத்தும் போது பின்வருமாறு செயலாற்றுதல் வேண்டும்.

வதியும் விருந்தினர்கள் மூலமாக பின்வரும் பணிகள் நிறைவேற்றப்படுதல் வேண்டும்.

  • தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை/ தொழிற்றுறை சேவையை முடிவுறுத்த எண்ணியுள்ளமை பற்றி இரண்டு (2) மாதங்களுக்கு முன்பதாக  நடைமுறைப்படுத்தும்  முகவர் நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.
  • தனது முதலீட்டுக் கருத்திட்டத்தை/ தொழிற்றுறை சேவையை முடிவுறுத்தியதன் பின் தாம் நாட்டைவிட்டு வெளியேற எண்ணும் பட்சத்தில், அவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பதாக, குறைந்த பட்சம் பதினான்கு (14) வேலை நாட்களுக்கு முன்பதாக எழுத்து மூலம் அறிவித்தல் வேண்டும்.

வதியும் விருந்தினர் திட்டத்தின் வீசாவைப் பெறுவதற்காக இருக்க வேண்டிய தகைமைகள் யாவை?

வதியும் விருந்தினர் வீசா திட்டம் வெளிநாட்டவர் அனைவருக்குமே திறக்கப்பட்டுள்ளது. இந் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக, கலாசார முன்னேற்றத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடிய எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளருக்கும்/ தொழிற்றுறையாளருக்கும் இத் திட்டத்தின் கீழ் வீசாவுக்காக விண்ணப்பிக் முடியும்.

வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழ் வீசா விண்ணப்பப் படிவத்தை எங்கிருந்து பெற்றுக் கொள்ள முடியும்?

  1. கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்.
  2. விண்ணப்பப்படிவத்தின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழான வீசா விண்ணப்பப் படிவத்தை எவ்வாறு சமர்ப்பிக்க முடியும்?

கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் வீசா பிரிவில் (04 ஆம் மாடி) சமர்ப்பிக்க முடியும்.

எனது வதியும் விருந்தினர் திட்ட வீசா அனுமதிப் பத்திரத்தின் உச்ச செல்லுபடிக் காலம் யாது?

வதியும் விருந்தினர் திட்டத்தின் வீசா அனுமதிப் பத்திரம் ஐந்து (05) வருடங்களுக்கு செல்லுபடியாகும்.

வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழான வீசாவை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ள முடியும்?

எல்லா வகையான வீசாக்களினதும் காலத்தை நீடிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களதின் பிரதான அலுவலகத்தில் ஒப்படைத்தல் வேண்டும். ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர், வீசா அனுமதிப் பத்திரத்தை நீடிப்பதற்காக விண்ணப்பிக்குமிடத்துகருத்திட்டங்களில் முதலீடு செய்தல், வங்கிக் கூற்றுகள் முதலான ஆவணங்களை, அவ் விடயங்களை நிரூபிக்கும் பொருட்டு சமர்ப்பிக்குமாறு வேண்டப்படுவீர்.

வரி செலுத்துப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்து மூலச் சான்றுகள் மற்றும் வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட கருத்திட்டங்கள் தொடர்பாக முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்ட சிபாரிசுகளையும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

வதியும் விருந்தினர் திட்டத்தின் கீழ் வீசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவத்தை எங்கே பெற்றுக் கொள்ள முடியும்?

  1. கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில்.
  2. வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகங்களில்.
  3. விண்ணப்பப் படிவத்தின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

எனது வதியும் விருந்தினர் வீசா திட்டத்துடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை?

உங்கள் பயண ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும், இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.

 




எங்களுடன் சேர்

எங்களை தொடர்பு கொள்ள

  • குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்
  • "சுகுறுபாயா", ஶ்ரீ சுபூத்திபுர வீதி,
  • பத்தரமுல்லை.
  • 1962 / +94 112 101 500
  • +94 011 2885 358
  • controller@Immigration.gov.lk
14672762